மாத்தி யோசி

"மாத்தி யோசி"- 'எல்லாரும் யோசித்து படம் எடுப்பார்கள்; நாங்கள் மாற்றியோசித்து படம் எடுத்துள்ளோம்' என்ற படக்குழுவினரின் பிரசங்கத்தாலும்,படத்தின் வித்தியாசமான சுவரொட்டிகளாளும், இயக்குனர் பத்திரிக்கையாளராகஇருந்தவர் என்பதாலும் படத்தின் மேல் கொஞ்சம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


எவருக்கும் அடங்காத நான்கு நண்பர்கள். மீன் பிடிப்பது, ஓனான்அடிப்பது, வேட்டையாடுவது, கொள்ளையடிப்பது, கொலையும் செய்வது எனஒற்றுமையாய் இருக்கிறார்கள். மேல் சாதியினர் குத்தகைக்கு எடுத்துவைத்திருந்த தேர் மற்றும் கடவுளை.. சேரிக்குள் இவர்கள் கொண்டு வரபிரச்சனையாகி ஊரை விட்டு சென்னைக்கு ஓடுகின்றனர். பிரச்சனையில் சிக்கும்நாயகிக்கு விக்ரமணன் பட நாயகர்கள் போல அடைக்களம் தந்து படிக்க வைக்கமுயலுகின்றனர். அவர்களின் முயற்சி வெற்றியடைந்ததா?? அந்த நண்பர்களின்வாழ்க்கை என்னவானது?? என்று பாரம்பரியமான துப்பாக்கி எடுத்தவர்களின்முடிவுடன் படம் நிறைவுறுகிறது.

புதுமுகங்கள் நால்வர் நாயகர்களாக. பாத்திரங்களாய் கண் முன் வாழ்ந்து மறைகிறார்கள்.

ஷம்முநாயகியாக. காஞ்சிவரம், தசாவதாரம், கண்டேன் காதலை போன்ற படங்களில் முன்பேநடித்திருப்பவர். நாயகியை வளர்த்த 'மாமா'வே விற்க முற்படும் பொழுது,நாயகன்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் தஞ்சம் புகுகிறார். சென்னையில்படித்து, வளர்ந்த பெண் பொறுப்பில்லாத கொள்ளை மற்றும் கொலை புரிபவர்களைவிட்டு விலகாமல் இருக்கிறார். அதற்கு காரணம்.. நாயகர்களின் கண்களில் தப்பைநாயகி காணாதது தான். இதே போல் பல நாயகிகளை இயக்குனர் விக்ரமணன் மூலம்தமிழ் ரசிகர்கள் பலமுறை பார்த்திருப்பார்கள்.

பொன்வண்ணன் இரட்டை வேடங்களில்(!?). சிரிப்பு தாதாவாக ஒரு பாத்திரம்.மற்றொன்று நாயகர்களின் குற்ற பிண்ணனியை தெரிந்துக் கொண்டு, ஒரு கொலைசெய்தால் மற்ற குற்றங்களில் இருந்து விடுவிப்பதாக பேரம் பேசும் காவல் துறைஅதிகாரி.

படத்தில் இரண்டு கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறார்கள். ஒன்று 'முன்தினம் பார்த்தேனே' என்று பாட்டு பாடும் பிச்சைக்காரன். ரசிக்கவைத்தாலும்.. படத்தில் இடம் பெறும் இந்த கதாபாத்திரம்  'லாஜிக் மீறல்களின்உச்சம். நான்கு ஆண்களுடன் சிநேகமாக பேசி வரும் பெண்ணைப் பார்த்து'ஐந்தாவதாக நான் இருக்கிறேன்' என்று பிச்சைக்காரன் அழைப்பது அபத்தம்.இரண்டாவது நாயகியின் மாமாவாக வரும் ரவி மரியா. நளின நடையாலும், மென்மையான்பேச்சுகளாலும் காட்சிகளில் தோன்றி, 'நானும் ஆம்பளை தான்டா' என்று சொல்லும்போது ரசித்து வைக்கிறார்.

இயக்குனர் நந்தா பெரியசாமி. படம் தொடங்கிய 15 நிமிடங்களில் நம்மைநிமிர்ந்து உட்கார வைக்கிறார். மலைகள், காடுகள் என கேமிரா கோணங்கள் நம்மைநாற்காலியின் நுனிக்கு அழைத்து செல்கின்றன. படம் விறுவிறுவென முன்னேறிஜாதி துவேஷத்தில் போய் நிற்கிறது. அங்கிருந்து கதை சென்னைக்கும், படம்மீண்டும் எழ முடியாத தொய்விற்கும் செல்கிறது. சுவாரஸ்யமான இடத்தில்'மாத்தி யோசி' என்ற பிண்ணனியொலி சுவாரஸ்யத்தை தவிடு பொடியாக்குகிறது.மீண்டும் கடைசிக் காட்சிகளில் ஜாதியை இழுக்கிறார்.

ஒருவழியாக படம் முடியும் பொழுது.. "மாத்தி யோசி" என்பதற்கு என்னஅர்த்தம் சொல்லியிருக்கிறார்கள் என்பது பூடகமாக விளங்கிறது. யோசி அல்லது யோசிக்காமல் இரு என்ற இரண்டு பதங்களில் கடைசி ஒன்றோடு தலைப்பை பொருத்திக் கொள்ளலாம்.

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 281
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
சே.ராஜப்ரியன் பதிந்த நேரம் :16-03-2010 13:57:14
கொஞ்சம் கூட யோசிக்காமா படம் எடுத்திருக்கானுங்க சோமாறிங்க .......
சாம்ராஜ் பதிந்த நேரம் :15-03-2010 22:16:28
படத்தில் இடம்பெறும் பெண்கள் முக்கால் வாசி பேர் கட்டப்பஞ்சாயத்து வில்லிகள் போல் காட்டப் பட்டுள்ளது.. ஏன்??